Tamil News
Home செய்திகள் கிளிநொச்சியில் நடைபெற்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் போராட்டம்

கிளிநொச்சியில் நடைபெற்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் போராட்டம்

இன்று(23) காலை காணாமல் ஆக்கப்பட்டோரின் பெற்றோர் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர்.

இன்று காலை கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் ஆரம்பமான இந்தப் பேரணியில் ஈடுபட்டவர்கள் காணாமல் போனோருக்கான அலுவலகத்தை நிராகரிக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறிய சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை வேண்டும். சர்வதேச விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக மேற்கொள்ளப்படல் வேண்டும் என்ற பதாகைகளை தாங்கியிருந்தனர்.

இவற்றுடன் அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்டும், கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் போன்ற பதாகைகளை அவர்கள் தாங்கியிருந்தனர்.

 

Exit mobile version