Home செய்திகள் காரைநகர் இளைஞன் லண்டனில் கொலை

காரைநகர் இளைஞன் லண்டனில் கொலை

anoja jpg காரைநகர் இளைஞன் லண்டனில் கொலைலண்டனில் தமிழர்கள் அதிகம் வாழ்ந்து வரும் ட்விக்கன்ஹாம் பகுதியில் தமிழ் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம், காரைநகரை பூர்வீகமாகக் கொண்ட அஜந்தன் (வயது 21) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார். இவர், முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் சகோதரனின் புதல்வராவார்.

இந்த இளைஞர் மீது கடந்த திங்கட்கிழமை இரவு கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அங்குபல்கலைக்கழகத்திலிருந்து வீட்டுக்கு ரயிலில் திரும்பிக் போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறியவருகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் 4 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.

Exit mobile version