Tamil News
Home உலகச் செய்திகள் காணாமல் போன அகதி: ஆஸ்திரேலியாவிடம் கேள்வி எழுப்பும் அகதிகள் நல ஆர்வலர்கள்

காணாமல் போன அகதி: ஆஸ்திரேலியாவிடம் கேள்வி எழுப்பும் அகதிகள் நல ஆர்வலர்கள்

கடந்த வாரத்தில், ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் குடிவரவு இடைத்தங்கல் தடுப்பு முகாமிலிருந்து காணாமல் போன ஈரானிய அகதி பர்ஹத் ரஹ்மதி எங்கே என ஆஸ்திரேலிய எல்லைப்படையிடம் அகதிகள் நல வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
உடற்பயிற்சி கூடத்திலிருந்து காவலாளிகளால் ஈரானிய அகதி வெளியேற்றப்பட்டது முதல் அவரைக் காணவில்லை எனச் சொல்லப்படுகின்றது. முன்னதாக, ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான அகதிகளின் நிலைக் குறித்து அவர் தொடர்ந்து கருத்துகளை தெரிவித்த ஒரு நபராக ஈரானிய அகதி பர்ஹத் ரஹ்மதி இருந்திருக்கிறார்.
Exit mobile version