Tamil News
Home செய்திகள் கல்முனை-மட்டக்களப்பு வீதியில் விபத்து இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

கல்முனை-மட்டக்களப்பு வீதியில் விபத்து இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு,மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிரான்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் பலியான சம்பவத்தினை தொடர்ந்து ஏற்பட்ட முறுகல் நிலை தொடர்பில் இளைஞர்கள் சிலர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இன்று மாலை கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதன் காரணமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அக்கரைப்பற்றில் இருந்து வாழைச்சேனை நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பஸ் அதே திசையில் சென்றுகொண்டிருந்தவர் மீது மோதி இழுத்துச்சென்றுள்ளது.

இதன்போது குறித்த மோட்டார் சைக்கிள் எரிந்த நிலையில் அதில் சென்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் அம்பிளாந்துறையை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து பஸ் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சில இளைஞர்கள் காத்தான்குடி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Exit mobile version