Tamil News
Home செய்திகள் கடும் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள பொலனறுவை மக்கள்..!

கடும் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள பொலனறுவை மக்கள்..!

பொலனறுவை மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக 5 பிரதேச செயலகங்களின் கீழுள்ள 18 கிராம சேவக பிரிவுகளிள் வாழும் 2 ஆயிரத்து 671 குடும்பங்களில் உள்ள 10 ஆயிரத்து 546 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு வற்ட்சியான காலநிலையின் காரணமாக திம்புலாக பிரதேச செயலகத்தின் கீழ் வாழும் மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த மத்திய நிலைய உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இங்கு 8 கிராம சேவக பிரிவுகளின் கீழுள்ள ஆயிரத்து 468 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Exit mobile version