Tamil News
Home உலகச் செய்திகள் ஓலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஒத்திவைக்கப்பட்டது

ஓலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஒத்திவைக்கப்பட்டது

இந்த வருடம் யப்பானில் இடம்பெறவிருந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி 2021 ஆம் ஆண்டுக்கு பிற்போடப்பட்டுள்ளதாக அனைத்துலக ஒலிம்பிக் சபை தெரிவித்துள்ளது.

கனடா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, ஈரான் உட்பட பல நாடுகள் தாம் இந்த போட்டியில் பங்கொடுக்கப்போவதில்லை என அறிவித்த பின்னர் சபை இந்த முடிவை எடுத்துள்ளது.

இதன் விளைவுகளை நாம் தற்போது கணிப்பிட முடியாது, ஆனால் ஜூலை 24 ஆம் நாள் திட்டமிட்டபடி போட்டிகள் ஆரம்பமாகாது, கொரோனா வைரசின் தாக்கத்தால் பல நாடுகள் இதில் பங்குபற்ற மறுத்துவருகின்றன என சபை மேலும் தெரிவித்துள்ளது.

Exit mobile version