Tamil News
Home செய்திகள் ஐ. நா. மனித உரிமை பேரவை தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு வழங்கும் – சுமந்திரன்

ஐ. நா. மனித உரிமை பேரவை தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு வழங்கும் – சுமந்திரன்

ஐ. நா. மனித உரிமை பேரவை தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என தமிழ்தேசிய கூட்டமைப்பு பெரும் நம்பிக்கை கொண்டுள்ளது என   நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் இந்து நாளிதழிற்கு தெரிவித்துள்ளார்.

இந்து நாளிதழிற்கு மேலும் அவர் தெரிவிக்கையில்,

“இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதா இல்லையா என்பது முற்றும் முழுதாக இந்தியாவை பொறுத்தவிடயம்.   ஆனால் இந்தியா இந்த தீர்மானத்திற்கு ஆதரவளிக்கவேண்டும் என்ற பெரும் எதிர்பார்ப்பு தமிழ்தேசிய கூட்டமைப்பிடம் உள்ளது.

மனித உரிமை பேரவையின் அமர்வில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தியா தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் குறித்து தெரிவித்தமை காரணமாக இம்முறை நாம் பெரும் எதிர்பார்ப்பை கொண்டிருக்கின்றோம்”  என்றார்.

Exit mobile version