Tamil News
Home செய்திகள்   ஐ.நா அறிக்கையாளரை அனுமதித்த பதில் வெளிவிவகார செயலர் பதவி நீக்கம்

  ஐ.நா அறிக்கையாளரை அனுமதித்த பதில் வெளிவிவகார செயலர் பதவி நீக்கம்

தலைமை நீதியரசர் மற்றும் மேல்நீதிமன்றநீதிபதிகளை,  ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்சந்திப்பதற்கு ஒழுங்கு செய்யுமாறுநீதியமைச்சின் செயலருக்கு அறிவுறுத்தலை அனுப்பிய- வெளிவிவகார அமைச்சின்மேலதிக செயலர் அகமட் ஜவாட்டை பதவியில்இருந்து நீக்குமாறு சிறிலங்கா அதிபர்மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் மாலை, சுதந்திரமாக ஒன்றுகூடுவதற்கான உரிமைகள் தொடர்பானஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர்கிளெமென்ற் நயாலெட்சோசி வூல்,சிறிலங்காவின் நீதிபதிகளைச் சந்திக்கவிருந்தநிலையில், அதனை தடுக்குமாறுசபாநாயகரிடம் எதிர்க்கட்சியினர் கோரினர்.

அதற்கமைய, அந்தச் சந்திப்பை நிறுத்துவதற்குசபாநாயகர் நடவடிக்கை எடுத்திருந்தார். இந்தநிலையில், சிறிலங்கா அதிபர்மைத்திரிபால சிறிசேன, வெளிவிவகாரஅமைச்சர் ரவிநாத ஆரியசிங்கவுக்குபிறப்பித்துள்ள உத்தரவில், வெளிவிவகார அமைச்சின் பதில் செயலராகவும், மேலதிகசெயலராகவும் உள்ள அகமட் ஜவாட்டை அந்தப்பதவியில் இருந்து நீக்குமாறு அறிவுறுத்தியுள்ளார் அதேவேளை, சபாநாயகர்கரு ஜெயசூரியவும்,  வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலர் அகமட் ஜவாட்டைஅழைத்து, எதிர்க்கட்சியினரின் கரிசனையை வெளிப்படுத்தியுள்ளார்.

 

Exit mobile version