Tamil News
Home செய்திகள் ஐ.தே.க. செயற்குழுவை அவசரமாக கூட்ட ரணில் உத்தரவு; சஜித் தரப்பினர் மீது ஒழுக்க நடவடிக்கை

ஐ.தே.க. செயற்குழுவை அவசரமாக கூட்ட ரணில் உத்தரவு; சஜித் தரப்பினர் மீது ஒழுக்க நடவடிக்கை

ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழுவின் கூட்டமொன்றை உடனடியாகக் கூட்டுமாறு அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசத்தை பணித்துள்ளார்.

கட்சியில் இருந்து பிரிந்து சென்ற சஜித் பிரேமதாச உட்பட்ட உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது, அவர்களை கட்சியிலிருந்து நீக்குவது உட்பட்ட விடயங்களை ஆராய இந்த செயற்குழுக்கூட்டம் கூட்டப்படவுள்ளதாக அறியமுடிந்தது.

தேர்தலுக்கு முன்னர் சஜித் தரப்பு உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்கி விசேட அறிவிப்பை விட ரணில் தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.

Exit mobile version