Tamil News
Home செய்திகள் ஐரோப்பிய சதுரங்க போட்டியில் வெற்றியீட்டிய தமிழ் சிறுமி

ஐரோப்பிய சதுரங்க போட்டியில் வெற்றியீட்டிய தமிழ் சிறுமி

பிரித்தானியாவை சேர்ந்த தமிழ் சிறுமி குரோசியாவில் இடம்பெற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான சதுரங்க போட்டியில் முதலிடத்தை வென்றுள்ளார்.

போதனா சிவானந்தன் என்ற 8 வயதுள்ள சிறுமியே இந்த போட்டியில் 13 இற்கு 8.5 புள்ளிகளை பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். 13 சுற்றுக்களாக இடம்பெற்ற இந்த போட்டியில் 555 போட்டியாளர்களும், 48 சாதனையாளர்களும், 50 அனைத்துலக நிபுணர்களும் கலந்துகொண்டிருந்தனர். கடந்த சனிக்கிழமை(16) குரோசியாவில் இந்த போட்டி இடம்பெற்றிருந்தது.

நான் எப்போதும் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதுண்டு. சில சமயங்களில் அது கைகூடும் சில சமயங்களில் அது கிடைக்காது. இந்த போட்டியில் வெற்றியீட்டியதையிட்டு நான் பெருமிதம் கொள்கின்றேன் என போதனா தனது வெற்றி குறித்து பி.பி.சி செய்தி நிறுவனத்திற்கு கருத்து தெரிவிக்கும் போது தெரிவித்துள்ளார்.

8 வயது சிறுமி மிகவும் அதிசயிக்கத்தக்க வெற்றியை ஈட்டியுள்ளது தன்னை ஆச்சரியப்பட வைத்துள்ளதுடன், அவரின் திறமையை கண்டு பெருமிதமும் கொள்ளவைப்பதாக றோமானியா நாட்டைச் சேர்ந்த சதுரங்க விளையாட்டு சாதனையாளர் ஜரீனா பொல்மகா தெரிவித்துள்ளார்.

போதனா அண்மையில் பிரித்தானியாவின் பிரதமர் ரிசி சுனாக்கையும் சந்தித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

Exit mobile version