Tamil News
Home செய்திகள் எதிர்வரும் ஓகஸ்ட் 05இல் நாடாளுமன்றத் தேர்தல்

எதிர்வரும் ஓகஸ்ட் 05இல் நாடாளுமன்றத் தேர்தல்

கொரோனா தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் 05ஆம் திகதி நடைபெறுமென தேர்தல்கள் திணைக்களம் நேற்று அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்பிரல் 25ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜுன் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் பலத்த கண்டனம் தெரிவித்திருந்தன. இந்த  ஒத்திவைப்பிற்கு எதிர்த்து உச்ச நீதிமன்றில் எதிர்க்கட்சியினர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். ஆனால் இந்த மனு அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் 05ஆம் திகதி நடைபெறுமென தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாக முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி, புதிய சுகாதார விதிமுறைகளுடன் தேர்தல் நடத்தப்படும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் மகிந்த தேச்பபிரிய செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.

Exit mobile version