Tamil News
Home செய்திகள் ஊடகங்கள் அனுமதிக்கப்படாது வடபகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆயுத அகழ்வு

ஊடகங்கள் அனுமதிக்கப்படாது வடபகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆயுத அகழ்வு

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள பழைய இரும்பு விற்பனை நிலையத்திற்குள் ஆயுதங்கள் இருப்பதாகத் தெரிவித்து அதனை அகழ்வு செய்வதற்கான அனுமதியை நீதிமன்றில் பெற்று அகழ்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

புதுக்குடியிருப்பு பொலிசாரால் இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ்.லெனின்குமாரிடம் அனுமதி பெறப்பட்ட நிலையில் காலை 10 மணிமுதல் அகழ்வுப் பணி நடபெற்று வருகின்றது.

பொலிசார், விசேட அதிரடிப்படையினர் இணைந்து குறித்த அகழ்வுப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் குறித்த பகுதியில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என அறிய முடிகின்றது.

இந்த அகழ்வுப் பணி நாளை வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version