சீனாவிலுள்ள, உலகின் மிகப் பெரும் அணையாகக் கருதப்படும் த்ரீ கார்ஜஸ் அணை உடையும் அபாயத்தில் உள்ளதாகக் கூறப்படுகின்றது. சீனாவில் 40 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாகவே இந்த அணை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த அணை உடைந்தால் வூஹான் மாகாணமே மூழ்கும் என்றும் கூறப்படுகின்றது.
2012ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த அணையை கட்டுவதற்கு 10 இலட்சம் மக்களின் வீடுகள், நிலங்கள் அபகரிக்கப்பட்டன. 1000 சரது கிலோமீற்றர் தேக்கப் பகுதியைக் கொண்ட இந்த அணை, நிரம்பும் நிலையில் இருப்பதல், அதிலிருந்து மேலதிக நீர் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நீரில் பல கிராமங்கள் மூழ்கியுள்ளன. மேலும் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த அணையில் சிறு சிறு பகுதிகள் உடைக்கப்பட்டு வருகின்றது.