Tamil News
Home செய்திகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தெரிவுக்குழு விசாரணைகளை உடன் நிறுத்துமாறு மைத்திரி பணிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தெரிவுக்குழு விசாரணைகளை உடன் நிறுத்துமாறு மைத்திரி பணிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்க ள் தொடர்பாக பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அதிகாரிகளிடம் நடத்தப் பட்டுவரும் விசாரணை விசாரணையை உடன் நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

நேற்றுக்காலை ஜனாதிபதியைச் சந்தித்த சபாநாயகர் கருஜயசூரயவிடமும் ஜனாதிபதி இந்த உத்ரவை விடுத்தார்.

தெரிவுக்குழுவின் விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாதென ஜனாதிபதி பணித்திருந்த நிலையில் நேற்றையதினமும் அதனை ஒளிபரப்புச்செய்ய தெரிவுக்குழுவினர் முயற்சித்தவேளை அதனை ஜனாதிபதி தடுத்திருந்தார்.

இந்தநிலையில் நேற்றுக்காலை ஜனாதிபதியைச் சந்தித்த சபாநாயகர் ஒளிபரப்பு விடயம் குறித்து பேச்சு நடத் தினார்.இதன்போது ஒளிபரப்பை மட்டுமல்ல தெரிவுக்குழு விசாரணைணையே உடன் நிறுத்துமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.

இதனிடையே நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்ந்தும் விசாரணையை தொடர்ந்துட மேற்கொண்டால் நாடாளு மன்றையே ஒத்திவைக்கவேண்டிய நிலை ஏற்படலாமென நேற்றுமுன்தினம் பிரதமர் ரணிலை சந்தித்தவேளை ஜனாதிபதி கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version