Tamil News
Home செய்திகள் ஈ.பி.டி.பி.யின் தேர்தல் பிரசாரத்துக்குச் சென்ற 10 இளைஞர்கள் பொலிஸாரால் கைது

ஈ.பி.டி.பி.யின் தேர்தல் பிரசாரத்துக்குச் சென்ற 10 இளைஞர்கள் பொலிஸாரால் கைது

ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற வேட்பாளர் சட்டத்தரணி ரெமிடியஸ் நடத்திய தேர்தல் கலந்துரையாடலில் கலந்துகொண்ட 10 இளைஞர்கள் நேற்று யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளளர்.

நல்லூர் பகுதியில் நேற்று மாலை பல இளைஞர்களை அழைத்து இந்த வேட்பாளர் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார். இதன்போது சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் கலந்துரையாடலில் கலந்துகொண்ட 10 இளைஞர்களைக் கைது செய்தனர்.

சுகாதார முறைகளைப் பின்பற்றாததாலேயே இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனப் பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவித்தன.

Exit mobile version