எதிர்வரும் செப்ரம்பர் மாதத்திற்கு முன்னர் இலங்கையில் கோவிட்-19 நோயினால் 14,331 பேர் மரணமடையலாம் என அமெரிக்காவின் வொசிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார ஆய்வுப் பிரிவு தனது கணிப்பீட்டில் தெரிவித்துள்ளது.
கோவிட் நிலவரம் தொடர்பில் கடந்த 21ஆம் நாள் இலங்கையில் இருந்து பெறப்படட் தகவல்களின் அடிப்படையில் இந்த கணிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.