Tamil News
Home செய்திகள் இலங்கையில் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் 05 பேர் உயிரிழப்பு

இலங்கையில் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் 05 பேர் உயிரிழப்பு

நாட்டில் மத்திய மற்றும் தென் பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே மழையுடனான வானிலை நிலவிவருகின்றது. இந்த நிலையில், இன்று அதிகாலை முதல் பெய்த கடும் மழையுடனான வானிலையினால் இன்று நண்பகல் பல நகரங்கள் நீரில் மூழ்கின. குறிப்பாக ரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை நகரம் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது.

பலாங்கொடை நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. நகர் பகுதிகளில் 5 அடி வரை வெள்ள நீர் உட்புகுந்துள்ளதாகவும், நகரை அண்மித்த பகுதிகளில் சுமார் 10 அடியை விடவும் அதிக உயரத்திற்கு நீர் உட்புகுந்துள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

இந்த அசாதாரண நிலைமை காரணமாக 05 பேர்வரை உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப் படுகிறது.அத்துடன் 196 குடும்பங்களைச் சேர்ந்த 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version