Tamil News
Home செய்திகள் இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமானத் தளம்

இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமானத் தளம்

இதுவரை விமானப்படையினரின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த பலாலி விமானப்படைத் தளம் தற்போது  பொதுமக்கள் போக்குவரத்து செய்யக்கூடிய சிவில் விமானப்படைத் தளமாக இன்றிலிரு்து விளங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  போருக்கு முன்னரும் இந்த விமானப்படைத் தளம் சர்வதேச விமானப்படைத் தளமாக இருந்து வந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டுள்ள சிவில் விமான சேவைகள் ராஜாங்க அமைச்சர் அசோக் அபயசிங்க தெரிவிக்கையில், பலாலி விமான நிலைய மையத்தினுள் வரும் அராலி – தெல்லிப்பளை  வல்லை வீதியின் ஒரு பகுதியை இராணுவத்திலிருந்து மீள பெற்றுத் தந்தால், அதை காப்பற் வீதியாக மாற்றியமைத்து, பொது மக்களின் போக்குவரத்திற்கு நன்மையளிக்கக் கூடியவாறு மாற்றித் தரமுடியும் என்று கூறினார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், இலங்கையில் இதுவரை இரண்டு சர்வதேச விமான நிலையங்களே இருக்கின்றன. இன்றிலிருந்து மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக பலாலித் தளமும் விளங்கும் என்று கூறினார்.

தென்னாசிய நாடுகளின் அடிப்படையில் தரமான விமானசேவை ஊடாக வருமானம் பெறுவதில் இலங்கை முன்னணியில் இருக்கின்றது.

நாட்டு மக்களின் போக்குவரத்திற்காக 2000 பேருந்துகளை கொள்வனவு செய்யவிருக்கின்றோம். இவற்றில் யாழ்ப்பாணத்திற்கு நான்கு பேருந்துகள் கொடுக்கப்படவிருக்கின்றன. மேலும் புகையிரத சேவைக்கு 12 இயந்திரங்கள் இந்தியாவிடம் கோரப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

 

Exit mobile version