இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இருநாள் பயணமாக இலங்கை வந்தடைந்துள்ளார்.
இந்தியாவுக்கு சொந்தமான விசேட விமானத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக இலங்கைக்கு வந்தடைந்துள்ளார்.
அவருடன் இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் இருவரும் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயணத்தின் போது அவர் ஜனாதிபதி பிரதமர் வெளிவிவகார அமைச்சருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் பயணத்தின் மூலம் 2021 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த முதல் வெளிநாட்டு பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.