Tamil News
Home செய்திகள் இரு முக்கியஸ்தர்களின் இரகசிய சந்திப்பு – வியூகம் வகுக்கின்றன சிங்களக் கட்சிகள்

இரு முக்கியஸ்தர்களின் இரகசிய சந்திப்பு – வியூகம் வகுக்கின்றன சிங்களக் கட்சிகள்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அமைச்சர் சஜித் பிரேமதாசாவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று 06.08 அன்று அலரிமாளிகையில் நடைபெற்றதாக அறியமுடிகின்றது.

06.08 அன்று மாலை 7.30 வரை நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்பாக சாட்சியமளித்த பின்னர், ரணில் விக்கிரமசிங்க அமைச்சர் சஜித் பிரேமதாசாவை சந்தித்துள்ளார். இச்சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்கள் மிகவும் இரகசியமாக பாதுகாக்கப்படுவதாக அறியமுடிகின்றது.

ஐ.தே.கவுக்குள் கூட்டணி அமைப்பது, மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான குழப்பங்கள் தொடர்பாக பேசப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் தமிழ் மக்களை ஏமாற்றி எப்படி வெற்றியீட்டுவது என்பது தொடர்பில் சிங்களக் கட்சிகள் திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version