Tamil News
Home செய்திகள் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இந்தோனேசியா, இலங்கை கலந்துரையாடல்

இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இந்தோனேசியா, இலங்கை கலந்துரையாடல்

இலங்கைக்கான இந்தோனேசியா தூதுவர் தேவி குஸ்டினா டோபிங் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

இக்கலந்துரையாடலின் போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு தரப்பும் கலந்துரையாடியதுடன், அனைத்து அபிவிருத்தி முயற்சிகளிலும் இந்தோனேசியா இலங்கைக்கு தனது ஆதரவை வழங்கும் என தெரிவிக்கப்பட்டது.

மோதல் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து நாட்டில் நல்லிணக்க முயற்சிகளை மேம்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் விரிவாக எடுத்துரைத்தார்.

அரசியல் மற்றும் கலாசாரத் துறைகளில் இலங்கைக்கு இந்தோனேசியாவின் தொடர்ச்சியான ஆதரவையும் தூதுவர் உறுதியளித்துள்ளார்.

Exit mobile version