உயர்மட்ட சீன பாதுகாப்பு தூதுக்குழுவின் உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒர் அங்கமாக இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ உதவிகள் தொடர்பான ஆவணங்களும் கைச்சாத்திடப்பட்டன. கொழும்பு ஷங்க்ரி-லா ஹோட்டலில் நடைபெற்ற சந்திப்பில் இந்த ஆவணங்கள் கைச்சாத்திடப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங்கின் உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒர் அங்கமாக இருதரப்பு கலந்துரையாடல் கொழும்பு ஷங்க்ரி-லா ஹோட்டலில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்தே குறிப்பிட்ட ஆவணங்கள் கைச்சாத்திடப்பட்டன.
இந்த கலந்துரையாடலில் இலங்கைக்கான சீன தூதுவர் கி சென்ஹோங், இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே மற்றும் முப்படை தளபதிகள் கலந்து கொண்டனர்.
இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் நீண்டகால இருதரப்பு உறவுகளை நினைவு கூர்ந்த ஜெனரல் குணரத்ன, பௌத்தம், வர்த்தகம், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் உலகளாவிய இணைப்பு உள்ளிட்ட பல வழிகளில் சீனா இலங்கையின் வரலாற்று ரீதியில் நட்பு நாடாக இருந்து வருகின்றது என்றார்.
இரு நாடுகளுக்கிடையில் காணப்படும் இராணுவ ரீதியிலான ஒத்துழைப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த ஜெனரல் ஃபெங், நடைமுறை சாத்தியமான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இலங்கையுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
உயர்மட்ட சீன பாதுகாப்பு தூதுக்குழுவின் உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒர் அங்கமாக இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ உதவிகள் தொடர்பான ஆவணங்களிலும் கைச்சாத்திடப்பட்டன.
மேலும் இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் பாதுகாப்பு செயலாளர், முப்படை தளபதிகள் மற்றும் சீன தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கிவந்த ஜெனரல் ஃபெங் ஆகியோருக்கிடையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.