Tamil News
Home உலகச் செய்திகள் இரண்டு இஸ்ரேலிய உளவு விமானங்கள் லெபனானில் வீழ்ந்தன

இரண்டு இஸ்ரேலிய உளவு விமானங்கள் லெபனானில் வீழ்ந்தன

லெபனானின் தெற்கு பெய்றூட்டில் உள்ள கிஸ்புல்லா படையினரின் தீவிரமான ஆளுமையுள்ள பகுதியில் இஸ்ரேல் படையினருக்கு சொந்தமான இரண்டு ஆளில்லா உளவு விமானங்கள் வீழ்ந்து நொருக்கியுள்ளதாக றொய்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்தள்ளதாவது:

ஈரானின் ஆதரவுடன் இயங்கிவரும் இந்த குழுவினரின் பகுதியில் இன்று (25) காலை பாரிய வெடிச்சத்தம் கேட்டதாக அந்தப்பகுதி மக்கள் தெரிவித்தள்ளனர். இது உளவு விமானம் தரையில் வீழ்ந்து வெடித்ததால் ஏற்பட்டிருக்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமது ஊடக மையத்திற்கு அண்மையாகவே உளவு விமானம் வீழ்ந்துள்ளதாக கிஸ்புல்லா அமைப்பின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதற்கு அண்மையாக உள்ள கட்டிடம் ஒன்று சேதமடைந்துள்ளதுடன், விமானத்தின் பகுதிகளை சிலர் எடுத்துச் செல்வதையும் காணமுடிகின்றது.
விமானம் வீழ்ந்து நொருக்குவதற்கு முன்னர் விமானம் பறக்கும் சத்தம் கேட்டதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு விமானம் வீழ்ந்து நொருக்கியதுடன், மற்றையது வானில் வெடித்துச் சிதறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் இஸ்ரேல் அரசு கருத்து எதனையும் கூற மறுத்துவிட்டது. எனினும் லெபனானின் வான்பரப்பில் அடிக்கடி அத்துமீறி பறப்பில் ஈடுபடும் இஸ்ரேல் போர்விமானங்கள் சிரியா மீது தாக்குதல் மேற்கொள்வது இங்கு குறிப்பிடத்தக்கது.

Exit mobile version