Tamil News
Home செய்திகள் இரட்டைக் குடியுரிமையை வரவேற்றுள்ள மனோ

இரட்டைக் குடியுரிமையை வரவேற்றுள்ள மனோ

இரட்டைக் குடியுரிமையுள்ளவர்கள் நாடாளுமன்றம் செல்வதை அனுமதிக்கும் மாற்றத்தை தாம் வரவேற்பதாக நாடாளுன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணணேசன் தெரிவித்துள்ளர்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

20 ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பல விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது, ஆனால் இரட்டைக்குடியுரிமை உள்ளவர்கள் அரசியலில் ஈடுபடுவதை அனுமதிக்கும் மாற்றத்தை ஏற்கலாம்.

இரட்டைக் குடியுரிமையுள்ள பசில் ராஜபக்சா வெளியில் இருந்து தானியங்கி கருவி மூலம் அரசை இயக்குவதை விட அவர் நாடாளுமன்றத்திற்கு வந்து அதனை மேற்கொள்ளலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version