இந்தோனேசியாவில் சுமாத்திரா தீவின் மெடான் மாநகரத்தில் ஐக்கிய நாடுகள் அகதிகள் அலுவலகத்தின் முன்னால் பல நாட்டு அகதிகள் ஒன்று திரண்டு 23 நாள் காலை தொடக்கம் மதியம் வரை ஒரு மணிநேரம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டம் இரண்டாவது நாளாக 24.08 அன்றும் தொடர்ந்தது. இரண்டாம் நாள் போராட்டம் காலை 9 மணிமுதல் மதியம் 1 மணிவரை நடைபெற்றது.
ஈழ அகதிகள் தமிழ் மொழியில் பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் கலந்து கொண்டனர். குறித்த போராட்டத்தில் ஈடுபடும் அகதிகள், மீள் குடியேற்றம் நடைபெறாமல் உள்ளதால் தங்களுக்கான மீள்குடியேற்றத்தை பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகளுகு்கு மேற்கொள்ளுமாறு ஐ.நா. அகதிகள் அமைப்பிற்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபடும் அகதிகள் இந்தோனேசிய அரசு எமக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பதற்கு நன்றி தெரிவித்துள்ளனர். அதேபோல் அகதிகளுகு்கான மீள் குடியேற்றத்தை மேற்கொள்ளுமாறு ஐ.நாவிற்கு சர்வதேச நாடுகளுக்கும் அடுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர்.
ஜெகரத்தா, சூரபாயா, மகசார், சுமாத்தராவில் மெடான் போன்ற இடங்களில் தொடர்ச்சியாக போராட்டங்கள்நடைபெறுகின்றது. இதற்கு இந்தோனேசிய அரசும் பொலிசாரும் தேவையான ஆதரவை வழங்கி வருகின்றனர்.
மீண்டும் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு போராட்டம் தொடரப்போகின்றமை குறிப்பிடத்தக்கது.