Tamil News
Home உலகச் செய்திகள் இந்தோனீசியாவில் நில நடுக்கம் – நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகி இருக்கலாம் என அச்சம்

இந்தோனீசியாவில் நில நடுக்கம் – நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகி இருக்கலாம் என அச்சம்

இந்தோனீசியாவின் சுலவேசி தீவில் 6.2 அளவில் ஏற்பட்ட கடும் நில நடுக்கத்தில் பெருமளவானவர்கள் பலியாகியிருக்கலாம் என  அஞ்சப்படுகின்றது.

நிலநடுக்கத்தால் தேசமாகியுள்ள ஒரு மருத்துவமனையில் பல நோயாளிகளும், ஊழியர்களும் சிக்கிக்கொண்டிருக்கலாம் என்றும் செய்திகள் கூறுகின்றன.

இது வரையில் 26 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றன.

மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் இந்த நிலநடுக்கத்தில் காயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

மோசமான, நாசகர நிலநடுக்கங்களும், சுனாமியும் பல முறை தாக்கிய நாடு இந்தோனீசியா. 2018ம் ஆண்டு சுலவேசி தீவில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 2 ஆயிரம் பேருக்கு மேல்  பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version