Tamil News
Home செய்திகள் இந்திய வெளியுறவு அமைச்சர் – ரணில் விக்கிரமசிங்க மாலைதீவில் சந்திப்பு

இந்திய வெளியுறவு அமைச்சர் – ரணில் விக்கிரமசிங்க மாலைதீவில் சந்திப்பு

மாலைதீவில் எதிர்வரும் செப்டெம்பர் 3, 4ஆம் திகதிகளில் நடைபெறும் இந்தியப் பெருங்கடல் நாடுகளின் மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்துப் பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2019ஆம் ஆண்டின் இந்திய பெருங்கடல் மாநாட்டில் மாலைதீவு அதிபர், சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இம்மாநாட்டில் பங்கேற்கவுள்ள இந்திய மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார்.

 

Exit mobile version