Tamil News
Home உலகச் செய்திகள் இந்தியா மக்களுக்கு உதவுங்கள்  – பாகிஸ்தான் மக்கள் இம்ரான் கானிடம் வேண்டுகோள்

இந்தியா மக்களுக்கு உதவுங்கள்  – பாகிஸ்தான் மக்கள் இம்ரான் கானிடம் வேண்டுகோள்

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று மற்றும் உயிரிழப்பால் நெருக்கடியைச் சந்தித்து வரும் மக்களுக்கு உதவுமாறு பாகிஸ்தான் மக்கள் அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கானிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக இந்தியாவில் 3 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள, 2 ஆயிரத்துக்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஐக்கிய அமீரகம், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், கனடா போன்ற நாடுகள் இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.

இந்த துன்பமயமான சூழலில் இந்தியாவுக்கு ஆதரவாக இருக்குமாறு  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அந்நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version