Home செய்திகள் இந்திய எல்லைக்குள் நுழைந்து போராடுவதே அடுத்த இலக்கு – கடற்றொழிலாளர் சம்மேளனத் தலைவர்

இந்திய எல்லைக்குள் நுழைந்து போராடுவதே அடுத்த இலக்கு – கடற்றொழிலாளர் சம்மேளனத் தலைவர்

3 04 07 இந்திய எல்லைக்குள் நுழைந்து போராடுவதே அடுத்த இலக்கு - கடற்றொழிலாளர் சம்மேளனத் தலைவர்இந்திய எல்லைக்குள் நுழைந்து எமது எதிர்ப்பை வெளியிடுவதே அடுத்த இலக்கு என்று யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ் ரட்ணகுமார் தெரிவித்துள்ளார்.

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பருத்தித்துறை பகுதியில் இருந்து இலங்கை கடல் எல்லைவரை நேற்று இடம்பெற்ற கறுப்புக்கொடி போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அத்துமீறிய இந்திய கடற்றொழிலாளர்களால் தொடர்ச்சியாக எமது வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு வரும் நிலையில் எமது கண்டனத்தையும் எமது ஆதங்கங்களையும் வெளிப்படுத்தும் முகமாக இலங்கை கடல் எல்லை வரை எமது கறுப்புக்கொடி போராட்டத்தை முன்னெடுத்தோம்.

இதற்கு முன்னரும் அத்துமீறிய இந்திய கடற்தொழிலாளர்களை கட்டுப்படுத்துமாறு கோரிப் பல போராட்டங்களை முன்னெடுத்தோம். ஆனால் தொடர்ந்தும் அவர்களது வருகை இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் எமது எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தும் முகமாக கடல் வழியாக இலங்கை எல்லைவரை எமது கறுப்புக்கொடி போராட்டத்தை முன்னெடுத்தோம்.

இந்தப் போராட்டத்தை ஒரு ஆரம்பப் போராட்டமாகவே பார்க்கிறோம். ஏனெனில் நாம் எமது கடல் எல்லைவரை போராட்டத்தை முன்னெடுத்ததோடு இந்திய எல்லைக்குச் செல்லவில்லை. இந்திய எல்லைக்கு செல்வோமாயின் என்ன நடக்கும் என்பதும் எமக்குத் தெரியும். ஆனால் அது பற்றி நாம் கவலைப்பட மாட்டோம். அத்தோடு எமது கோரிக்கைகளை இலங்கை அரசும் இந்திய அரசும் ஏற்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

இல்லாத பட்சத்தில் உயிர்ச்சேதம் ஏற்பட்டாலும் பரவாயில்லை என்றும் நிலையில் இந்திய எல்லைக்குள் நுழைந்து எமது எதிர்ப்பை வெளியிடுவதே அடுத்த இலக்கு” என்று அவா் தெரிவித்தாா்.

Exit mobile version