Tamil News
Home உலகச் செய்திகள் இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் முறையிடு: இம்ரான்கான்

இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் முறையிடு: இம்ரான்கான்

பாகிஸ்தான்: ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் முறையிட இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.  ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதுடன் மாநிலத்தை இரண்டாக பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்நிய அரசின் இந்த செயலுக்கு பாகிஸ்தான் அரசு இநதிய தூதரான அஜய் பிசாரியாவை நேரில் அழைத்து கண்டனத்தை தெரிவித்தது.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக நேற்று கூடிய பாகிஸ்தான் நாடாளுமன்றம் அமளியில் முடிந்ததால் இன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அவையில் பேசினார். இந்த நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் இம்ரான்கான் இப்பிரச்சனையை ஐ.நா.சபைக்கு எடுத்துச் செல்ல இருப்பதாக கூறினார். பாஜகவின் சித்தாந்தத்தால் இந்தியாவின் சிறுபான்மை மக்கள் இனவெறிக்கு ஆளாக்கப்படுவதை சர்வதேச சமுகத்திற்கு முன் தெரிவிக்க இருப்பதாக தெரிவித்தார்.

Exit mobile version