Tamil News
Home உலகச் செய்திகள் இந்தியப் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்

இந்தியப் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து மெயில் அனுப்பப்பட்டுள்ளதால், அவரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், நேற்றைய தினம்(08)  என்.ஐ.ஏ ஈமெயில் முகவரிக்கு பிரதமர் மோடி கொலை செய்யப்பட வேண்டும் என்ற வாசகங்களுடன் மெயில் ஒன்று வந்தது. இதனையடுத்து பிரதமரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என எஸ்.பி.ஜிக்கு பாதுகாப்புப் படைக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த ஈமெயில் குறித்து விசாரிப்பதற்காக ‘றோ’ அமைப்பின் மூத்த அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றது. முதல்க்கட்ட விசாரணைகளில் வந்த ஈமெயில் வெளிநாட்டிலிருந்து வந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

Exit mobile version