Tamil News
Home செய்திகள் அவசரகலாச் சட்டம் நீக்கம்; ஆனால் கைதுகள்,தடுத்துவைத்தல் தொடர்பில் பாதிப்பில்லை – சிறி.காவல்துறை

அவசரகலாச் சட்டம் நீக்கம்; ஆனால் கைதுகள்,தடுத்துவைத்தல் தொடர்பில் பாதிப்பில்லை – சிறி.காவல்துறை

அவசரகால சட்டம் நீக்கப்பட்டமை சோதனை, கைது, தடுத்து வைத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என சிறிலங்கா காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட பின்னர் நாட்டில் தொடர்ந்தும் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இது ஒவ்வொரு மாதமும் பாராளுமன்றத்தில் பிரேரிக்கப்பட்டு விவாதம் நடாத்தப்பட்டு நீடிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அவசரகலாச் சட்டம் நீக்கப் பட்ட இந்த அறிவிப்பானது சிறிலங்கா அரசின் ஒரு ஏமாற்று வித்தை என நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Exit mobile version