Tamil News
Home செய்திகள் அறகலய தொடர்பில் தெரிவு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் – விமல் வீரவன்ஸ

அறகலய தொடர்பில் தெரிவு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் – விமல் வீரவன்ஸ

‘அறகலய’ இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்பட்ட தேசிய மற்றும் சர்வதேச தரப்பினர் குறித்து விசாரணைகளை மேற் கொள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.

நேற்று நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை யில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு நிறைவடைந்த தினத்தன்று நீங்கள் (சபாநாயகர்) சபைக்கு விசேட உரையாற்றினீர்கள். அறகலய வேளையில் அரசமைப்புக்கு முரணான வகையில் ஜனாதிபதி பதவியை பொறுப்பேற்க தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலும் அரசியல் தரப்பின் மட்டத்திலும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தீர்கள்.

‘9 செகவுனு’ என்று தலைப்பிடப் பட்ட புத்தகத்தை நான் வெளியிட் டேன். அதில் தேசிய மற்றும் சர்வதேச தரப்பினர் உங்களுக்கு அழுத்தம் பிரயோகித்தமையையும் கொழும்பில் உள்ள தூதரகங்கள் செயல்பட்ட விதத்தையும் பெயர் குறிப்பிட்டு வெளிப்படுத்தியுள்ளேன். அதேபோல் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் வெளியிட்ட புத்தகத்தின் முன் அட்டை யில் ‘சூழ்ச்சி’ என்று குறிப்பிடப்பட் டுள்ளது. ஆனால், புத்தகத்துக்குள் அவ்வாறு ஏதும் குறிப்ப்பிடப்பட வில்லை.

நீங்கள் பொய்யுரைக்கவில்லை என்று நான் நம்புகிறேன். அதேபோல் மனச்சாட்சிக்கு அமைய நானும் பொய்யுரைக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதியும் பொய்யுரைக்கவில்லை என்று நம்புகிறேன். பொருளாதார நெருக்கடியின் போது நாட்டின் இறையாண்மையை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் செயல்பட்ட தரப்பினர் தொடர்பில் நாட்டுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும். ஆகவே, இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரு நாள் விவாதத்தை நடத்த வேண்டும். நாட்டின் இறையாண்மையை நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையில் செயல்பட்ட தரப்பினர் குறித்து நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைத்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். கடந்த காலத்தை மறந்து விட்டு செயல்படலாம் என்று கருதுவது மக்களாணையை அவமதிப்பதாகும்” என்று விமல் வீரவன்ச தெரிவித்தாா்.

Exit mobile version