Home செய்திகள் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி வவுனியா மற்றும் மட்டக்களப்பில் போராட்டம்

அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி வவுனியா மற்றும் மட்டக்களப்பில் போராட்டம்

அரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்ப்பாட்டில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அதே நேரம் மட்டக்களப்பிலும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
DSC00162 அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி வவுனியா மற்றும் மட்டக்களப்பில் போராட்டம்
வவுனியா காமினி மகாவித்தியாலத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
 
நீண்டகாலமாக சிறைகளில் வாடிக்கொண்டிருக்கும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். தற்பொது  கோவிட்19 தாக்கத்திற்கு மத்தியில் அவர்கள் மிகுந்த பாதிப்புக்களை எதிர் நோக்கியிருக்கின்றனர்
எனவே அவர்களது பிள்ளைகள் குடும்பத்தினரின் நலனையும் அவர்களது நலனையும் கருத்தில் கொண்டு ஜனாதிபதி அவர்களை விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எமது உறவுகளை சிறைகளில் மடியவிட வேண்டாம், தமிழ் அரசியல் கைதிகள் பயங்கவாதிகள் இல்லை, கைதிகளிற்கு பொது மன்னிப்பு வழங்கு போன்ற பாதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
இந்நிலையில்,தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி இன்று மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுகாதார வழிமுறையினை பின்பற்றியவாறு இந்த போராட்டம் இன்று காலை காந்திபூங்கா முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
வடகிழக்கு மாகாண பொது மக்கள், சிவில் அமைப்புகள், அரசியல் கைதிகளின் குடும்பங்கள் என்பன இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தது.
இலங்கை அரசே அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்க என்னும் தொனிப்பொருளிளல் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இலங்கை அரசே தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்து நல்லிணக்கத்தினை உறுதிப்படுத்து,தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குங்கள் போன்று சுலோகங்கள் தாங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
இதன்போது அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் பயங்கரவாத தடைச்சட்டத்தினையும் நீக்குமாறு வலியுறுத்தப்பட்டது.
Exit mobile version