Tamil News
Home செய்திகள் அரசாங்கத்தின் பங்காளியே தமிழ் தேசிய கூட்டமைப்பு : விமல்

அரசாங்கத்தின் பங்காளியே தமிழ் தேசிய கூட்டமைப்பு : விமல்

சிங்களவர்கள் தமிழ் மக்களின் விரோதிகள் என்ற பிரசாரத்தையே தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டுவருகின்றது.அத்துடன் அரசாங்கத்தின் பங்காளியாக இருந்துகொண்டு வாக்களித்த மக்களை ஏமாற்றுவதற்கே அரசாங்கத்துக்கு எதிராக செயற்பட்டுவருகின்றது என எதிர்க்கட்சி உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதிய அரசியலமைப்பு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையைில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிடடார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக தெரிவித்த அரசாங்கம் இன்னும் எதனையும் செய்யவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு இங்கு தெரிவிக்கின்றது.

ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தின் பங்காளியாகவே இருந்து வருகின்றது. இதனை வாக்களித்த மக்களுக்கு மறைக்கவே அரசாங்காத்துக்கு எதிராக சபையில் கதைக்கின்றனர்.

அத்துடன் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டாலும் எதிர்க்கட்சி தலைவருக்கு கிடைக்கும் அனைத்து வரப்பிரசாதங்களும் அரசாங்கத்தினால் அவருக்கு வழங்கப்படுகின்றன என அவர் சபையில் தெரிவித்தார்.

நன்றி: வீரகேசரி

Exit mobile version