Tamil News
Home உலகச் செய்திகள் அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 8 பேர் பலி

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 8 பேர் பலி

அமெரிக்காவின் இந்தியானா காவல்துறையில் ஒரு துப்பாக்கிதாரி கண்மூடித்தனமாக சுட்டத்தில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஃபெட் டெக்ஸ் வளாகத்தில் நடந்த இந்த சம்பவத்தில் பல முறை துப்பாக்கி வெடிப்பதை கேட்டதாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர். தானியங்கி துப்பாக்கியை ஒரு நபர் இயக்குவதைப் பார்த்ததாக ஒரு சாட்சி கூறுகிறது.

துப்பாக்கிதாரி தனி ஆளாக செயல்பட்டதாகவும், அவர் தம்மைத் தாமே சுட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அந்த இடத்தில் மேற்கொண்டு ஆபத்து ஏதுமில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

நன்றி – பிபிசி

Exit mobile version