Tamil News
Home செய்திகள் அனைத்துப் பாடசாலைகளும் இன்று முதல் வழமைபோல்; முகக் கவசம் அணிவது கட்டாயம்

அனைத்துப் பாடசாலைகளும் இன்று முதல் வழமைபோல்; முகக் கவசம் அணிவது கட்டாயம்

இன்று தொடக்கம் அனைத்துப் பாடசாலைகளினதும் கற்றல் செயற்பாடுகள் வழமை போல் ஆரம்பமாகின்றன. இந்நிலையில், அனைத்து மாணவர்களும் முகக் கவசம் அணிவதும், அவர்களுக்கு வழிகாட்டப்பட்ட சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவதை கட்டாயமாக்க வேண்டும் என் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கொரோனா தொற்றுநோய் இன்னும் பல நாடுகளில் பரவலாக இருப்பதால், இந்த நோய் நம்நாட்டிலிருந்து ஒழிக்கப்பட்டுவிட்டது என்று கருத முடியாது என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதி ஹரிதா அலுத்ஜ் கூறுகிறார்.

பாடசாலைகளின் கல்வியின் இயல்பான தொடக்கமாக சமூக இடைவெளி ஒரு மீற்றருக்கு இடையில் உள்ள தூரம் குறைக்கப்பட வேண்டும் என்பதால் முகக் கவசம் அணிவது மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Exit mobile version