Tamil News
Home செய்திகள் அதிக வெப்பத்தால் யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு!

அதிக வெப்பத்தால் யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு!

நிலவும் அதிக வெப்பத்தால் புன்னாலைக்கட்டுவனை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். சிவஞானம் ஜெயக்குமார் (வயது 45) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். நேற்று முன்தினம் மதியம் இடம்பெற்ற இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

மதியம் 1.45 மணியளவில் உயிரிழந்தவர் மதுபோதையில் இருந்துள்ளார். இதனை அவரின் மகள் அவதானித்துள்ளார். பிற்பகல் 3.30 மணியளவில் அவர் வெயிலில் விழுந்து கிடந்தார். குடும்பத்தார் அவரை தூக்கியபோது அவர் உயிரிழந்து காணப்பட்டார். இதையடுத்து சடலம் தெல்லிப்பழை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து யாழ். போதனா மருத்துவமனைக்கு உடற்கூற்று பரிசோதனைக்காக மாற்றப்பட்டது.

பரிசோதனையில் சடலத்தில் 10 இற்கும் மேற்பட்ட இடங்களில் அதிக வெப்பத்தால் ஏற்பட்ட எரிகாயங்கள் காணப்பட்டன. மரணம் குறித்த விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் நேற்று நடத்திய பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிக வெப்பத்தால் ஏற்பட்ட ஆவது மரணம் இதுவாகும். ஏற்கனவே, 5 பேர் வரை அதிக வெப்பத்தால் உயிரிழந்தனர் என்றும் மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று அண்மையில் யாழ். போதனா மருத்துவமனை மருத்துவர்கள் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அறிவுறுத்தியிருந்தனா்.

Exit mobile version