Tamil News
Home உலகச் செய்திகள் மியான்மார் நிலச்சரிவில் 50 சுரங்கத் தொழிலாளர்கள் பலி

மியான்மார் நிலச்சரிவில் 50 சுரங்கத் தொழிலாளர்கள் பலி

மியான்மார் நாட்டில் சுரங்கத் தொழிலாளர் 50பேர் நிலச்சரிவில் அகப்பட்டு பலியாகியுள்ளனர்.

மியான்மார் நாட்டில் பச்சை மரகதக் கல் வெட்டியெடுக்கும் சுரங்கத்தில் பணிபுரிந்த 50 தொழிலாளர்களே மேற்படி அனர்த்ததத்தில் பலியாகியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் விலையுயர்ந்த மரகதக் கற்களை எடுக்கும் ஜேட் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மண்ணிற்கு அடியில் சிக்கி 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100இற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

நிலச்சரிவில் சிக்கியுள்ள பணியாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

Exit mobile version