Tamil News
Home உலகச் செய்திகள் மலேசியாவில் வெளிநாடுகளைச் சேர்ந்த 31 பேர் கைது

மலேசியாவில் வெளிநாடுகளைச் சேர்ந்த 31 பேர் கைது

மலேசியாவின் Tanag Merah பகுதியில் நடத்தப்பட்ட இரண்டு வெவ்வேறு தேடுதல் நடவடிக்கையில், சுற்றுலா பேருந்துகளில் சட்டவிரோதமான முறையில் அழைத்து வரப்பட்ட 31 வெளிநாட்டினரை மலேசிய எல்லை கட்டுப்பாட்டு முகமை கைது செய்துள்ளது.
இதில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டினர் தாய்லாந்து மற்றும் மியான்மர் நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Op Benteng கீழ் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில், குடியேறிகளை அழைத்து வந்த இரண்டு மலேசிய ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Exit mobile version