Tamil News
Home செய்திகள் கொரோனாவால் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தம், நெடுஞ்சாலைகள் மூடல்

கொரோனாவால் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தம், நெடுஞ்சாலைகள் மூடல்

இலங்கையில் கொரோனா தாக்கம் தீவிரமடைந்துள்ளதால், அரசாங்கம் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இதனால் அனைத்து விதமான ரயில் சேவைகளும் இன்று(20) மாலை 6 மணிமுதல் எதிர்வரும் திங்கட்கிழமை (23) காலை 6மணிவரை இடைநிறுத்தப்படுவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. மக்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேற்படி திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை நாட்டின் சகல அதிவேக நெடுஞ்சாலைகள் இன்று 4 மணியுடன் மூடப்படுமென வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாடு முழுவதும் இன்று 6மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்படுமென பொலிசார் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version