Tamil News
Home செய்திகள் கல்முனை விவகாரத்திற்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு: சிறீலங்கா அரசு

கல்முனை விவகாரத்திற்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு: சிறீலங்கா அரசு

கல்முனை பிரதேசசபையை தரமுயர்த்துவது தொடர்பிலான பிரச்சனைக்கான தீர்வை சிறீலங்கா அரசு ஒரு மாதத்திற்குள் முன்வைக்கும் என சிறீலங்கா அமைச்சரவை நேற்று (25) தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விவாகாரம் நீண்ட நாள் பிரச்சனையாகும், 1989 ஆம் ஆண்டில் இருந்து இந்த விவகாரம் உள்ளது என சிறீலங்காவின் உள்த்துறை அமைச்சர் வஜிரா அபயவர்த்தனா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள பல கோரிக்கைகளை ஆராய்ந்த பின்னரே இதற்கான முடிவு மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version