Tamil News
Home செய்திகள் ஏ9 வீதியில் சோகம்! சம்பவ இடத்திலேயே பலியான இளைஞன்

ஏ9 வீதியில் சோகம்! சம்பவ இடத்திலேயே பலியான இளைஞன்

முல்லைதீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முறிகண்டியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

இந்த விபத்து முறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் நேற்று இரவு 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஏ9 வீதியில் வேகமாக பயணித்த மோட்டார்சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியது.

விபத்தில் சாந்தபுரம் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய சுப்பையா தர்ஷன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version