Tamil News
Home செய்திகள் ஈழ அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க கோரிக்கை மத்திய அரசிடம் கோரிக்கை: பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா

ஈழ அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க கோரிக்கை மத்திய அரசிடம் கோரிக்கை: பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா

மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் திட்டங்களைதான் திமுகவின் தேர்தல் அறிக்கையாக வந்துள்ளது எனத் தெரிவித்துள்ள காரைக்குடி பாஜகவேட்பாளர் ஹெச்.ராஜா, குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது நீதிமன்றம் முடிவு மூலம்தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை என்றும் ஈழ அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

காரைக்குடி தொகுதி பாஜக வேட்பாளர்   ஹெச்.ராஜா தேவகோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சுரேந்திரனிடம்  வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த போதே இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க  மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version