Tamil News
Home செய்திகள் இந்திய கடல் பாதுகாப்பு குறித்து இலங்கை அக்கறை காட்ட வேண்டும்; இந்திய வெளிவிவகாரப் பேச்சாளர்

இந்திய கடல் பாதுகாப்பு குறித்து இலங்கை அக்கறை காட்ட வேண்டும்; இந்திய வெளிவிவகாரப் பேச்சாளர்

இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு குறித்து இலங்கை அக்கறையுடன் செயற்படும் என எதிர்பார்ப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரின்டம் பக்ச்சி நேற்று இந்தக் கருத்தை வெளியிட்டார்.

இலங்கை, பகிரப்பட்ட சூழலில் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட எங்களின் பரஸ்பர பாதுகாப்பு உட்பட எங்களின் மிகச்சிறந்த இரு தரப்பு ஒத்துழைப்பை கருத்தில் கொள்ளும் என எதிர் பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரரிவித்தார்.

கொழும்பு துறை நகர திட்டம் குறித்து எங்களின் சமீபத்தைய பாதுகாப்பு அடிப்படையில் சமீபத்தைய விடயங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகநகர கட்டமைப்பு குறித்து இலங்கையில் வெளியிடப்பட்டுள்ள கரிசனைகளை கருத்திலெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version