Tamil News
Home செய்திகள் அவசரகால சட்டம் – அதி விசேட வர்த்தமானி இன்று வெளியீடு

அவசரகால சட்டம் – அதி விசேட வர்த்தமானி இன்று வெளியீடு

சிறிலங்காவில் அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாதத்திற்கு நீடிக்கும் விசேட வர்த்தமானி இன்று வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக மக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியைப் பாதுகாக்கும் நோக்கில் அவரகாலச்சட்டம்  நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஏற்பட்ட அமைதியின்மையை கருத்திற் கொண்டு, சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் அவசரகாலச் சட்டம் உடன் அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறீலங்கா அரசு பயங்கரவாத தடைச்சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி சிறுபான்மை இன மக்களை துன்புறுத்துவதாக குற்றச்சாட்டுக்கள் ஏழுந்துள்ள நிலையில் தற்போது அவசரகாலச்சட்டத்தை அது கொண்டுவந்துள்ளது சிறுபான்மை இன மக்களை அடக்கி ஒடுக்கும் உத்தியாகும் எனக் கருதப்படுகின்றது.

Exit mobile version