Tamil News
Home செய்திகள் யாழ். அரசாங்க அதிபர் பதவி விலகினார்

யாழ். அரசாங்க அதிபர் பதவி விலகினார்

யாழ். அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில் அவர் தனது பதவியிலிருந்து விலகுவதாக இன்று(14) அறிவித்துள்ளார். அத்துடன் தான் ஓய்வு பெறும் வரையும் தான் பணிபுரிய விரும்பியதாகவும், ஆனால் இடமாற்றம் செய்ததால் தான் பதவியிலிருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.

இவரின் பதவி வெற்றிடத்திற்கு நிதி பொருளாதார கொள்கைகள் அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றிய கணபதிப்பிள்ளை மகேசன் பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று மதியம் பதவி விலகிச் செல்லும் அரச அதிபர் நாகலிங்கன் வேதநாயகனுக்கு பிரியாவிட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version