X-Press Pearl கப்பல் விபத்து விவகாரம் – இடைக்கால இழப்பீடு வழங்க காப்புறுதி நிறுவனம் இணக்கம்

X-Press Pearl கப்பலினால்  இலங்கை கடற்றொழில்துறைக்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக கோரப்பட்ட இழப்பீட்டை வழங்க கப்பலின் காப்புறுதி நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.

சட்டமா அதிபரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்து, கப்பலின் காப்புறுதி நிறுவனம் இந்த இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளது.

 மேலும்  இடைக்கால இழப்பீடாக 720 மில்லியன் ரூபா   வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும்  நீதி அமைச்சர் அலி சர்பி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஐக்கிய நாடுகள் சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவொன்று இன்று தென் கடற்பிராந்தியத்தில் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளது என்றும் மூழ்கிக்கொண்டிருக்கும் X-Press Pearl கப்பலினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆராய்வதற்கு குறித்த குழு தென் கடற்பிராந்தியத்திற்கு பயணிக்கவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.