Tamil News
Home உலகச் செய்திகள் உலகம் இரட்டை வேடம் போடுகின்றது – உலக சுகாதார நிறுவனம்

உலகம் இரட்டை வேடம் போடுகின்றது – உலக சுகாதார நிறுவனம்

உக்ரைனில் இடம்பெறும் போர் தொடர்பில் உலக நாடுகள் காண்பிக்கும் அக்கறைகளை உலகின் ஏனைய பகுதிகளில் இடம்பெறும் போரில் கண்பிக்காதது மிகுந்த வேதனையைத் தருகின்றது என உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியேசஸ்  தெரிவித்துள்ளார்.

எனது சொந்த நாடான எதியோப்பியாவில் இடம்பெற்ற போரை இந்த உலகம் திரும்பிப் பார்க்கவில்லை, எதியோப்பியா, ஆப்கானிஸ்தான், சிரியா உட்பட உலகின் பல பகுதிகளில் போர் இடம்பெற்றுள்ளது, யேமன் உட்பட பல நாடுகளில் தற்போதும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன, ஆனால் உக்ரைன் போர் தொடர்பில் காட்டும் அக்கறையை அனைத்துலக சமூகம் ஏனைய போர்கள் தொடர்பில் காண்பிக்கவில்லை. உலகம் இரட்டை வேடம் போடுகின்றது.

Exit mobile version