ஜூன் 2022 முதல் இலங்கை மக்களுக்கு உலக உணவுத் திட்டம் உதவி

ஜூன் 2022 இல் அவசரகால பதிலளிப்பு தொடங்கியதிலிருந்து இலங்கையில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் WFP உதவியைப் பெற்றுள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

இலங்கை தொடர்பான அதன் சமீபத்திய நிலைமை அறிக்கையில், WFP ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் WFP இன் அவசர உணவு மற்றும் பண உதவியைப் பெற்றுள்ளனர், மேலும் ஒரு மில்லியன் பாடசாலை மாணவர்கள் பாடசாலை உணவைப் பெற்றுள்ளனர்.

அவசரகால நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 12,000 மெட்ரிக் தொன் பொருட்களை அனுப்பியதாக WFP குறிப்பிட்டுள்ளது. பெப்ரவரி 20 மற்றும் 2023 மார்ச் 20 க்கு இடையில், WFP 141,085 பாடசாலை மாணவர்களுக்கு 1,037
பாடசாலைகளில் பாடசாலை உணவுக்காக வலுவூட்டப்பட்ட அரிசியை வழங்கியது.

இலங்கையில் 32 வீதமான குடும்பங்கள் உணவு பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும், 73 வீதமான குடும்பங்கள் எதிர்மறையான உணவு மற்றும் வாழ்வாதார அடிப்படையிலான சமாளிப்பு உத்திகளை தொடர்ந்து பின்பற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.